Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆபாச படவுலகில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும்போது அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன் என கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் கூறி உள்ளார். கேன்ஸ் அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கா கேன்ஸ் பட விழாவில் சன்னி லியோன், ராகுல் பட் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.படத்தின் பிரீமியருக்கு, சன்னி ஒரு தோள்பட்டை வெளிர் இளஞ்சிவப்பு நிற கவுனை அணிந்திருந்தார். அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்காக கேன்ஸில் இருக்கும் சன்னி லியோன், "இன்று வரையிலான எனது கேரியரில் இது மிகவும் அற்புதமான தருணங்களில் ஒன்றாகும்" என்று கூறி உள்ளார்.
மேலும் ஆபாச படத்துறையில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும் போது தான் அவமானங்களையும், பல கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக கூறினார். சன்னி தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் பலவிதமான விமர்சனங்களையும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால் தனது கடின உழைப்பால் தன்னை விமர்சித்த அனைவரையும் சன்னி லியோன் ரசிகர்களாக மாற்றினார்.
ஆரம்ப நாட்களில் பல முன்னணி நடிகர்கள் சன்னியுடன் நடிக்க மறுத்துவிட்டனர். சன்னி லியோன் தனது அணுகுமுறையின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர். அவரது பயணம் முழுவதும் அவரது கணவர் டேனியல் வெப்பர் அவருக்கு ஆதரவாக இருந்தார். சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பர் எப்படி ஆபாச படங்களில் தன்னுடன் இணைந்தார் என்பது குறித்து மனம் திறந்து கூறினார்.